May 16, 2024
படிச்சது ஓமியோபதி பார்க்கறது..! இங்கிலீஸ் மருத்துவம்..!

படிச்சது ஓமியோபதி.. பார்க்கறது இங்கிலீஸ் மருத்துவம்..!

பள்ளிபாளையம் அருகே ஹோமியோபதி மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்த மருத்துவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கொக்கராயன்பேட்டை பகுதியில் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு, ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், குமாரபாளையம் தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாரதி கொடுத்த புகாரின் பேரில், மருந்து ஆய்வாளர் மற்றும் மருத்துவ ஆய்வாளர் தலைமையில் பள்ளிபாளையம் போலீசார் தனியார் மருத்துவமனையில் […]

பரிசலில் சென்று கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த கிராம மக்கள்

பரிசலில் சென்று கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த கிராம மக்கள்

பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் காவிரி ஆறு நடுவில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழைமையான நட்டாற்றீஸ்வரர் எனும் ஆதி விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு பரிசலில் சென்று பக்தர்கள் கும்பாபிஷேக விழா நடத்தினர் . நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் கிராமத்தில், காவிரி ஆற்றின் மையத்தில் ஸ்ரீ அருள்தரும் விசாலாட்சி அம்மை உடனமர், அருள்தரும் ஆதி விஸ்வேஸ்வரர் எனும் நட்டாற்றீஸ்வரர் கோவில் பாறைகளின் நடுவே அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டு காலம் பழமையான கோவிலாக கருதப்படும் இந்த கோவிலுக்கு, ஆவத்திபாளையம் […]

பள்ளிபாளையம் ஓங்காளியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழா

பள்ளிபாளையம் ஓங்காளியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழா

பள்ளிபாளையம் ஓங்காளியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில், அருள்மிகு ஸ்ரீ குண்டத்து ஓங்காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கிய நிலையில், திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று பூமிதி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர் ,சிறுமியர் மற்றும் பக்தர்கள் […]

நாமக்கல்லில் சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக புகார்.

ஏழு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல மைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை அருகே உள்ள, கொல்லப்புரத்தான் தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் மணிகண்டன்- வனிதா தம்பதியினர். இவர்களுக்கு ஏழு வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குதிகால் இரண்டிலும் அதிக அளவு காயங்கள் இருந்ததைக் கண்ட அக்கம் […]