May 7, 2024
#செய்திகள்

நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு

நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு

நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில், எம்.பி. ராஜேஸ்குமார் தலைமையில், மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில், மத நல்லினிக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுராசெந்தில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மத நல்லிணக்க உறுதி மொழியை வாசித்தார்.

அன்பை வாழ்க்கை அறநெறியாகக் கொண்டும், மனித நேயத்தைக் நடைமுறை வழியாகக் கொண்டும் வாழ்வேன், மத வெறியை விலக்க மத நல்லிணம் பேனுவேன், மக்கள் ஒற்றுமையே மானுடத்தின் வளமும், நலமும் என்பதை மனதில் வைத்து எந்நாளும் உழைப்பேன், அனைவரிடமும் நல்லிணக்கம் பேணுவேன், மானுடம் போற்றுவேன் என்ற உறுதிமொழியை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இதில், நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, சட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், நகர செயலாளர்கள் ஆனந்தன், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், நவலடி, பாலசுப்ரமணியம் உள்ளிட்ட இந்து, முஸ்லீம், கிறித்துவ மத பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *