May 6, 2024
#செய்திகள்

மரவள்ளி விவசாயம் பண்ணுறீங்களா.. அப்போ உங்களுக்கு தான்..!

மரவள்ளி விவசாயம் பண்ணுறீங்களா.. அப்போ உங்களுக்கு தான்..!

நாமக்கல்லில் மரவள்ளி விலை நிா்ணயம் தொடர்பான முத்தரப்புக் கூட்டம் நாளை (ஜன. 5) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மரவள்ளி சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள் மற்றும் சேகோசர்வ் உள்ளிட்ட அரசுத் துறைகள் சார்ந்த அதிகாரிகளை கொண்ட முத்தரப்புக் கூட்டம் நாளை (ஜன5) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மரவள்ளி விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள் தவறாமல் கலந்துகொண்டு மரவள்ளி விலை நிா்ணயம் மற்றும் மரவள்ளி தொடர்பான பிரச்னைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்-நாமக்கல் ஆட்சியரிடம் மனு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *